இந்தியா - பங்களாதேஷ் இடையே ஃபெனி ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் : மைத்ரி சேது பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
Mar 9 2021 1:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - பங்களாதேஷ் இடையே ஃபெனி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள மைத்ரி சேது பாலத்தை, பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்தியா - பங்களாதேஷ் நாடுகளின் எல்லைகளை இணைக்கக்கூடிய ஃபெனி ஆற்றின் மீது, 133 கோடி ரூபாய் மதிப்பில் மைத்ரி சேது பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் சப்ரூம் பகுதியில் இருந்து பங்களாதேஷின் ராம்கர் பகுதி, இப்பாலம் மூலம் இணைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் மூலம் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து எளிதாகும் என கூறப்படுகிறது. சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தை, காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்ற பங்களாதேஷ் பிரதமர் திருமதி. ஷேக் ஹசினா, இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பங்களாதேஷ் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.