மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை எட்டு கட்டங்களாக நடத்துவதற்கு தடை கோரிய வழக்கு - தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
Mar 9 2021 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலை, எட்டு கட்டங்களாக நடத்த தடைக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறும் என, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாத இறுதியில் அறிவித்தது. இதற்கு, அம்மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.