பஞ்சாப் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் சுக்பால் சிங்குக்கு சொந்தமான இடங்களில் சோதனை
Mar 9 2021 1:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் திரு. சுக்பால் சிங் கைராவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பண மோசடி மற்றும் போலி பாஸ்போர்ட் மோசடி வழக்குகள் தொடர்பாக பஞ்சாப் ஏக்தா கட்சி தலைவரும், அம்மாநில எம்.எல்.ஏ.-வுமான திரு. சுக்பால் சிங் கைராவுக்கு சொந்தமான மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. பஞ்சாபில் 5 இடங்களிலும், சண்டிகரில் ஒரு இடத்திலும், டெல்லியில் 2 இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.