முல்லைப் பெரியாறு கண்காணிப்பு தொடர்பான வழக்கு - தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
Jan 25 2021 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக்கு, துணைக்குழு அமைக்கும் முடிவை ரத்து செய்யக்கோரிய வழக்கில், தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக்கு, துணைக்குழு அமைக்கும் மேற்பார்வைக் குழுவின் முடிவுக்கு எதிராக, கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் ஜோசப் உட்பட 3 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, 2 வாரங்களில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.