குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் தேசிய கொடியேற்றினார் முதலமைச்சர் கெஜ்ரிவால் - இந்த ஆண்டு கொரோனாவிலிருந்து முழுவதுமாக விடுபடுவோம் என நம்பிக்கை

Jan 25 2021 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்டு வருவோம் என டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்‍கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் வடக்‍கு டெல்லியில் உள்ள சத்ராஸல் ஸ்டேடியத்தில், மாநில அரசு சார்பில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக, இந்த ஆண்டு டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் குடியரசு தின கொண்டாட்டங்கள் இன்று நடைபெற்றன. இதையொட்டி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் தேசியக்கொடியை ஏற்றிவைத்து, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்‍கொண்டார்.

பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா காலத்தில் பெரும் சவால்களை சந்தித்ததாகவும், இந்த ஆண்டு கொரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்டு வருவோம் என்ற நம்பிக்‍கை உள்ளதாகவும் கூறினார். வளர்ந்த நாடுகளில்கூட கொரோனா சிகிச்சைக்‍காக மக்‍கள் தவித்ததை பார்த்துள்ளோம் - ஆனால் இங்கு சாதாரண அறிகுறி உள்ளவர்களுக்‍குக்‍கூட மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்‍கப்பட்டதாகத் தெரிவித்தார். டெல்லியில் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளதாகவும் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00