ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியில் இரு இளம்பெண்கள் நரபலி செய்யப்பட்ட கொடூரம் - மூடநம்பிக்கையின் உச்சத்தால் பெற்ற மகள்களையே நரபலி கொடுத்த ஆசிரிய தம்பதி

Jan 25 2021 10:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே, அற்புத சக்திகளைப் பெற வேண்டுமென்ற மூட நம்பிக்கையில், பெற்ற இரண்டு மகள்களையே ஆசிரியர் தம்பதியர் நரபலி கொடுத்துள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி சிவநகரில், புருஷோத்தம் நாயுடு - பத்மஜா என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் முதல்வராகவும், அவரது மனைவி பத்மஜா தனியார் பள்ளி ஒன்றின் தாளாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதியின் மூத்த மகள் அலேக்யா, போபாலில் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருந்தார். இளைய மகள் சாயி திவ்யா, BBA படித்து வந்ததோடு, மும்பையிலுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியிலும், பயின்று வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக, சொந்த ஊருக்கு வந்து இருவரும், பெற்றோருடனே தங்கியிருந்துள்ளனர். புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதியர், ஊரடங்கு காலத்தில், வீட்டில் பல பூஜைகளை செய்துள்ளனர். நேற்று இவர்களது வீட்டில் இருந்து சத்தம் வந்ததால், அருகிலிருந்தவர்கள் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகலறிந்து வந்த போலீசார் அவர்களது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, இரு பெண்களும் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இன்றுடன் கலியுகம் நிறைவடைவதால் தங்களது மகள்களை பலி தந்துள்ளதாகவும், நாளை காலை அற்புத சக்திகளுடன் அவ்விருவரும் உயிர்த்தெழுவார்கள் எனவும், பிதற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட விசாரணையில், உடற்பயிற்சி செய்யும் இரும்பு கருவியால் இருவரும் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. நன்கு படித்த பெற்றோரே, மூட நம்பிக்கையில் ஆழ்ந்து மகள்களை நரபலி தந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00