இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை விவகாரம் - எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து இருதரப்பினரும் மேற்கொண்ட பேச்சுவார்த்தை 15 மணிநேரம் நீடிப்பு
Jan 25 2021 10:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - சீனா இடையே எல்லைப்பகுதியில் நிலவும் பதற்றம் குறித்து , இரு நாட்டு ராணுவ அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
லடாக் எல்லைப்பகுதியில் தொடர்ந்து பல மாதங்களாக பதற்றம் நிலவுகிறது. இது தொடர்பாக, இரு நாட்டு ராணுவ மற்றும் தூதரக மட்டத்தில் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த நவம்பர் 6-ம் தேதி, 8-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், நேற்று 9-ம் கட்ட பேச்சுவார்த்தை, சீன எல்லைப் பகுதியில் உள்ள மோல்டோ என்ற இடத்தில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 11 மணிக்கு மேலும் நீடித்தது. எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப் பெறவேண்டும் என, சீன அதிகாரிகளிடம், இந்திய அதிகாரிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.