கேரளாவில் மேலும் 6 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா - 72 ஆயிரத்து 891 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
Jan 25 2021 10:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் மேலும் 6 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் நேற்று 6 ஆயிரத்து 36 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 173 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை 8 லட்சத்து 13 ஆயிரத்து 550 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 72 ஆயிரத்து 891 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.