குடியரசு தினப் பாதுகாப்பையொட்டி, நாளையும், நாளை மறுதினமும் டெல்லி மெட்ரோ ரயில்நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படும் - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
Jan 24 2021 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியரசு தினப் பாதுகாப்பையொட்டி, நாளையும், நாளை மறுதினமும் டெல்லி மெட்ரோ ரயில்நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நாளை மறுதினம் கோலாகல விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவுக்கான பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாளையும், நாளை காலை 6 மணிமுதல், நாளை மறுதினம் பிற்பகல் 2 மணிவரை டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.