கர்நாடகாவில் சட்டவிரோத கனிம சுரங்கங்கள் மூடப்படும் என முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு - விதிமுறைகளை மீறி குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை
Jan 24 2021 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் சட்டவிரோதமாக இயங்கும் கனிமச் சுரங்கங்கள் மூடப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு. எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் சில பகுதிகளில் அரசியல் கட்சிகள் துணையுடன் சமூக விரோதிகள் சட்டவிரோத கனிம சுரங்கங்களை நடத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் திரு. எடியூரப்பா, அதுபோன்ற கனிமச் சுரங்கங்கள் மூடப்படும் என கூறினார். இதுபோன்ற சுரங்கங்களை யாராவது நடத்தினால், அதுகுறித்த விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.