நாடு முழுவதும் இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - 6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்
Jan 24 2021 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகளில் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை அடுத்து, பல்வேறு மாநிலங்களிலும் அதனைச் செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 16-ம் தேதி, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதுவரை சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும், இந்தியா முழுவதும் 10 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.