டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தகராறு செய்த வழக்கு - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதிக்கு, 2 ஆண்டுகள் சிறை
Jan 24 2021 4:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தகராறு செய்த வழக்கில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., திரு. சோம்நாத் பாரதிக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள மாளவியா நகர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., திரு. சோம்நாத் பாரதி, 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று தகராறு செய்தார். இது தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, டெல்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த மாஜிஸ்திரேட் திரு. ரவீந்திர குமார் பாண்டே, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், அவருடைய ஆதரவாளர்கள் 4 பேரையும் விடுதலை செய்தார். எனினும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்காக, திரு. சோம்நாத் பாரதிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.