பறவைக்காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் - உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியீடு
Jan 24 2021 10:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ள நிலையில், இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பது குறித்து, FSSAI எனப்படும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழிகாட்டுதல் நெறிகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிக்கன் போன்ற இறைச்சியையும், முட்டையையும் சமைக்கும் போது, தொற்றுக்கிருமி பரவாமலிருக்க, 74 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சமைக்க வேண்டும் - அரைகுறையாக சமைக்கப்பட்ட இறைச்சியையும், ஆஃப்பாயில் போன்ற முட்டைகளையும் உண்பதைத் தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறவைகளை கையால் தொடுவதைத் தவிர்க்குமாறும், உயிரிழந்த பறவைகளை வெறும் கையால் தொட வேண்டாம் என்றும், இறைச்சியை திறந்தவெளியில் வைக்க வேண்டாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.