இந்திய - சீனா இடையே ராணுவத் தளபதிகள் இடையிலான 9வது சுற்றுப் பேச்சுவார்த்தை - சீன எல்லைப்பகுதியில் இன்று நடைபெறுகிறது
Jan 24 2021 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய - சீனா எல்லைப் பிரச்னையைத் தீர்க்க, ராணுவத் தளபதிகள் இடையிலான 9வது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று சீன எல்லைப்பகுதியில் நடைபெற உள்ளது.
லடாக் எல்லைப் பிரச்னை தொடர்பாக, இந்தியா - சீன ராணுவம் இடையே, ஏற்கனவே 8 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள போதும், பெரியளவில் முன்னேற்றம் இல்லை. இந்நிலையில், இன்று காலை 10.30 மணி அளவில், எல்லைப் பிரச்னை குறித்து 9வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்திய ராணுவ உயரதிகாரிகள் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் திரு. பி.ஜி.கே. மேனன் தலைமையில், எல்லையைத் தாண்டி சீனாவின் மால்டோ பகுதியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். லடாக் எல்லையில் சீனா குவித்துள்ள படைகளை கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலைக்கு திரும்பப் பெற வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.