மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தல் - புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
Jan 18 2021 7:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் இன்று நடைபெற்றது. புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கக்கோரிய தீர்மானத்தை முதலமைச்சர் திரு.நாராயணசாமி முன்மொழிந்தார். இந்த தீர்மானம் பேரவை உறுப்பினர்களின் விவாதத்திற்குப்பின் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தை வேளாண் துறை அமைச்சர் திரு.கமலக்கண்ணன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்தார். அப்போது, பேரவையில், 3 வேளாண் சட்ட நகல்களை, முதலமைச்சர் திரு.நாராயணசாமி கிழித்தெறிந்தார்.