புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் - காலம் தாழ்த்தி சோர்வடைய வைக்க மத்திய அரசு திட்டம் : மத்திய அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
Jan 17 2021 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து எந்தவித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவதன் மூலம், தாங்கள் சோர்வடைந்து போராட்டத்தை கைவிட்டு விடுவோம் என மத்திய அரசு சதித்திட்டம் தீட்டுவதாக, அகில இந்திய கிசான் சபா குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர்ந்து 54-வது நாளாக போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 9 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோமென, விவசாயிகள் உறுதியுடன் இருக்கும் வேளையில், போராட்டத்தைக் கலைக்க மத்திய அரசு சதித்திட்டம் தீட்டுவதாக, அகில இந்திய கிசான் சபையின் பொதுச்செயலாளர் திரு.ஹன்னன் மொல்லா குற்றம் சாட்டியுள்ளார். 2 மாதங்களாக தாங்கள் குளிரில் வாடிக்கொண்டிருக்கும் வேளையில், தாங்களாகவே சோர்வடைந்து போராட்டத்தை கைவிட வேண்டுமென திட்டம் தீட்டி, மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாகவும், திரு.ஹன்னான் மொல்லா தெரிவித்துள்ளார்.