ஆந்திராவில் கேஸ் கட்டரை பயன்படுத்தி ஏ.டி.எம்.,மில் ரூ.77 லட்சம் கொள்ளை : இருவரை கையும், களவுமாக பிடித்த போலீசார்

Nov 28 2020 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர மாநிலம் குண்டூரில், youtube-ஐ பார்த்து தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் கேஸ் கட்டரை பயன்படுத்தி 77 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

குண்டூர் மாவட்டம் தாட்சேப்பள்ளியில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை உள்ளது. இந்த வங்கியின் கீழ்தளத்தில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்குள், கடந்த 21-ம் தேதி நுழைந்த மர்ம நபர்கள், சி.சி.டி.வி., கேமரா இணைப்புகளை துண்டித்து, கேஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, 77 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த குண்டூர் போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சமூக வலைதளமான youtube-ஐ பார்த்து ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிப்பது குறித்து தெரிந்து கொண்டது தெரிய வந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00