ஒரே நாடு, ஒரே அணுகுமுறையை முதலில் கடைபிடியுங்கள் : மத்திய பா.ஜ.க. அரசுக்கு பிரியங்கா காந்தி வலியுறுத்தல்
Nov 28 2020 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒரே நாடு, ஒரே அணுகுமுறையை அமல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி. பிரியங்கா தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ள அவர், விவசாயிகளுக்கு உரிய மரியாதையை முதலில் வழங்குங்கள் என்றும், நாட்டு மக்கள் அனைவரிடமும் ஒரே அணுகுமுறையை கடைபிடியுங்கள் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.