கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலர் தற்கொலை முயற்சி - போலீசார் தீவிர விசாரணை

Nov 28 2020 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவத்தால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக பணியாற்றி வருபவர் என்.ஆர்.சந்தோஷ். இவர் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த மே மாதம் 28ம் தேதி இவர் முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதுமுதல் எடியூரப்பா தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம், என்.ஆர்.சந்தோசையும் அழைத்து சென்று வந்தார். முதலமைச்சருடன் நேரடி தொடர்பு உள்ள முக்கிய நபர்களில் ஒருவராக என்.ஆர்.சந்தோஷ் வலம் வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் என்.ஆர்.சந்தோஷ் தனது வீட்டில் உள்ள தன்னுடைய அறையில் மயங்கி கிடந்தார். உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், என்.ஆர்.சந்தோஷ் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நேற்று இரவு முதலமைச்சர் எடியூரப்பா எம்.எஸ்.ராமய்யா மருத்துவமனைக்கு நேரில் சென்று என்.ஆர்.சந்தோசின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00