வாடகை கார் நிறுவனங்களில் இணைந்து ஓட்டும் ஓட்டுநர்களுக்‍கு பயணிகள் கட்டணத்திலிருந்து 80 சதவீதம் அளிக்‍கவேண்டும் - மத்திய அரசு உத்தரவு

Nov 28 2020 11:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

வாடகை கார் நிறுவனங்களுடன் இணைந்து, கார்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு, பயணிகளிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்தில் 80 சதவீதத்தை வழங்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அவசர காலத்திற்கு வாடகை கார்களை பயன்படுத்தும் பயணிகளிடம், அடிப்படை கட்டணத்தைவிட ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணத்தை வாடகை கார் நிறுவனங்கள் வசூலிக்கலாம். தேவை குறைவாக உள்ள நேரங்களில் வாடகை கார்களை பயன்படுத்தும் பயணிகளிடம், அடிப்படை கட்டணத்தில் 50 சதவீதம் குறைத்து வசூலிக்‍கலாம். வாடகை கார் சேவைகளுக்கு, குறைந்தபட்ச கட்டணமாக 25 முதல் 30 ரூபாய் நிர்ணயிக்‍கப்பட்டுள்ளது. ஓலா, உபேர் உள்ளிட்ட வாடகை கார் நிறுவனங்களுடன் இணைந்து, கார்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு, பயணிகளிடம் வசூலிக்கும் கட்டணத்தில் 80 சதவீதத்தை வழங்கவேண்டும் எனவும், நிறுவனங்கள், 20 சதவீதத்தை மட்டுமே எடுத்துக்‍ கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை ஓட்டுநர்கள் வரவேற்றுள்ளனர். பயணிகளிடம் வசூலிக்‍கும் கட்டணத்தில், வாடகை கார் நிறுவனங்கள், தற்போது 25 முதல் 30 சதவீதத்தை எடுத்துக்‍கொள்வது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00