மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டம் : ரூ.24,000 கோடி ஒப்பந்தத்தை பெற்ற லார்சன் அண்டு டூப்ரோ
Nov 27 2020 3:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பை - அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளைச் செயல்படுத்தும் ஒப்பந்தம் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நிதியுதவியுடன் மும்பை - அகமதாபாத் இடையே 508 கிலோ மீட்டர் தொலைவுக்கு புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குஜராத் மாநிலத்தில் 325 கிலோ மீட்டர் தொலைவுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள, லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இது இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில், மிக அதிகத் தொகைக்கான கட்டுமானப் பணி ஒப்பந்தமாகும். இதனால் கட்டுமானப் பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால், அப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் பெறும் எனக் கூறப்படுகிறது.