ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி மீண்டும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்
Nov 27 2020 3:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹ்பூபா முஃப்தி, தான் மீண்டும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு, ஓராண்டுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர். திருமதி. மெஹ்பூபா மட்டும் 14 மாதங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 14-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், தான் மீண்டும் சட்டவிரோதமாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.