காற்றை சுத்திகரிக்கும் மினி ரோபோவை வடிவமைத்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் அசத்தல்
Nov 10 2020 6:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் பல நகரங்களில் காற்றுமாசு அதிகரித்து வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவர் ஒருவர் காற்றை சுத்திகரிக்கும் மினி ரோபோவை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
டெல்லி, மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. தலைநகர் டெல்லியில் காற்றுமாசு மிக மோசமான நிலையில் உள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் பிரஞ்சால், தனது நண்பனுடன் இணைந்து, காற்றை சுத்திகரிக்கும் ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். காற்றில் உள்ள PM2.5 என்ற மாசுத்துகள்களை நீக்கும் வகையில், இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது காற்றை சுத்திகரிக்கும் இயந்திரம் போல செயல்படும் என்றும் மாணவர் தெரிவித்தார்.