வட கர்நாடக மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆய்வு செய்தார்
Oct 21 2020 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வட கர்நாடக மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை, கர்நாடக முதலமைச்சர் திரு.எடியூரப்பா ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். கர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால், கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர், விஜயாப்புரா, பெலகாவி உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. சுமார் 28 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட திரு.எடியூரப்பா, அங்கு மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.