கேரள பத்திரிகையாளர் சித்திக்கை மீட்க உதவக்கோரி குடும்பத்தினர் ராகுல் காந்தியிடம் கோரிக்கை
Oct 21 2020 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசுக்கு செல்ல முயன்றபோது கைதான கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பானை மீட்க உதவும்படி, காங்கிரஸ் எம்.பி திரு.ராகுல்காந்தியிடம், பத்திரிகையாளரின் குடும்பத்தினர் நேரில் சென்று கோரிக்கை வைத்துள்ளனர். வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திரு.ராகுல்காந்தியை நேரில் சந்தித்த சித்திக்கின் குடும்பத்தினர், இந்த விவகாரத்தில் தலையிட்டு, பத்திரிகையாளரை விடுவிக்க உதவ வேண்டும் என கோரினர்.