எதிர்க்‍கட்சிகளின் குரலை ஒடுக்‍க சிபிஐ மற்றும் அமலாக்‍கத்துறையை மத்திய பா.ஜ.க. அரசு பயன்படுத்தி வருகிறது - உமர் அப்துல்லா குற்றச்சாட்டு

Oct 21 2020 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

எதிர்க்‍கட்சிகளின் குரலை ஒடுக்‍க சிபிஐ, அமலாக்‍கத்துறை ஆகியவற்றை மத்திய பா.ஜ.க. அரசு பயன்படுத்தி வருவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் திரு. உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணை நடத்தியது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் திரு. ஃபரூக்‍ அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிபிஐ தாக்‍கல் செய்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில், திரு. ஃபரூக்‍ அப்துல்லாவிடம் அமலாக்‍கத்துறை நேற்று முன்தினம் 6 மணி நேரத்திற்கும் மேலாக நேரில் விசாரணை நடத்தியது. இந்நிலையில், இன்றும் திரு. ஃபரூக்‍ அப்துல்லாவிடம் அமலாக்‍கத்துறை விசாரணை மேற்கொண்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்து அவரது மகனும், முன்னாள் முதலமைச்சருமான திரு. உமர் அப்துல்லா ட்விட்டரில் கண்டனம் பதிவு செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க எத்தனை முறை சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவற்றை பா.ஜ.க. பயன்படுத்தும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00