இந்தியாவில் முதற்கட்ட கொரோனா தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வழங்க மத்திய அரசு திட்டம்
Oct 21 2020 11:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில், முதற்கட்ட கொரோனா தடுப்பு மருந்து, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராஜேஷ் பூஷண், கொரோனா தடுப்பு மருந்து கிடைத்ததும் முதற்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த 3 கோடியில் 70 லட்சம் மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், 2 கோடி முன்னணி சுகாதார ஊழியர்கள் அடங்குவர் என குறிப்பிட்டுள்ளார். 3 கோடி தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த முதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதத்தில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக திரு. ராஜேஷ் பூஷண் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி கிடைத்த பிறகும், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பை மக்கள் அலட்சியம் செய்துவிட முடியாது என்றும் திரு. ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.