பெங்களூருவில் தொடர்ந்து அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் - முன்னணி நடிகைகளை தொடர்ந்து 'பிக்பாஸ்' போட்டியாளர் ஆடம் பாஷாவும் போதை மருந்தை பயன்படுத்தியதாக கைது

Oct 21 2020 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

பெங்களூருவில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக 'பிக்பாஸ்' போட்டியாளரும், திருநங்கையுமான ஆடம் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், சின்னத்திரை நடிகை அனிகாவிடம், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அனிகா, பெங்களூருவை சேர்ந்த நடன கலைஞரும், திருநங்கையுமான ஆடம் பாஷாவுக்கு போதைப்பொருள் விற்பனை செய்ததும், போதைப்பொருளை ஆடம் பாஷா பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆடம் பாஷாவை நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருநங்கையான ஆடம் பாஷா கடந்த ஆண்டு நடந்த கன்னட 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00