ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி - முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு

Oct 21 2020 11:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர மாநிலத்தில், அடு‌த்த மாதம் 2ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வந்தாலும், பள்ளிகள் திறப்பு விவகாரத்தில், சூழ்நி‌லையை கருதி அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், வரும் நவம்பர் மாதம் 2-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில முதலமைச்சர் திரு. ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக காணொலி வாயிலாக பேசிய அவர், ஒற்றைப்படை எண்களில் உள்ள வகுப்புகள் ஒரு நாளும், இரட்டைப்படை எண்கள் கொண்ட வகுப்புகள் ஒரு நாளும் என, காலை நேரத்தில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்தார். நவம்பர் மாதத்திற்கு மட்டுமே இந்த நடைமுறையில் வகுப்புகள் நடைபெறும் எனவும், அதன்பிறகு சூழலை மதிப்பிட்டு பள்ளிகள் செயல்படுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் முதலமைச்சர் திரு. ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00