நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மூலம் இன்று மாலை உரை நிகழ்த்துகிறார் பிரதமர் மோதி - ஒரு தகவலுடன் வரப்போவதாக ட்விட்டரில் பதிவு
Oct 20 2020 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ள நிலையில், நாட்டு மக்களிடையே பிரதமர் திரு. நரேந்திர மோதி, இன்று மாலை 6 மணிக்கு, காணொலி காட்சிமூலம் உரையாற்ற உள்ளார்.
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு ஒரு தகவலுடன் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அனைவரும் நிச்சயம் இணைந்திருங்கள் என்றும், ஒரு தகவலை மக்களிடம் பகிர்ந்துகொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தீபாவளி உள்ளிட்டப் பண்டிகைகள் வரவிருக்கும் நிலையில், ஒரு தகவலுடன் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றவிருப்பதாகக் கூறியிருப்பது பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.