புதுச்சேரியில் ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,452ஆக அதிகரிப்பு
Oct 20 2020 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 452ஆக அதிகரித்துள்ளது. இதில், மருத்துவமனை மற்றும் வீடுகளில் நான்காயிரத்து 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்து 774 பேர், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், கொரோனாவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 577ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.