வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் அரசு தீர்மானம் - சட்டப்பேரவையில் தீர்மானத்தை தாக்கல் செய்தார் முதலமைச்சர்
Oct 20 2020 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் இன்று தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளும், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் அரசு, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தீர்மானங்கள் தாக்கல் செய்துள்ளது. முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், சட்டப்பேரவையில் இன்று இந்த தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். மேலும், மின்சார சட்டத்தில் திருத்தங்கள் தொடர்பான தீர்மானமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து மத்திய அரசில் இருந்து விலகிய கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம், காங்கிரஸ் அரசு கொண்டு வந்த இந்த மசோதாக்களுக்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.