இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்குகிறது - தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியது
Oct 20 2020 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 46 ஆயிரத்து 791 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 லட்சத்து 97 ஆயிரத்து 64-ஆக உயர்ந்துள்ளது. இதில், 7 லட்சத்து 48 ஆயிரத்து 538 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 69 ஆயிரத்து 720 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இதுரை 67 லட்சத்து 33 ஆயிரத்து 329 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 587 பேர் மரணமடைந்து உள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 197-ஆக அதிகரித்துள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.