பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - தாமதமானாலும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என அத்வானி கருத்து
Sep 30 2020 1:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வெளியாகியிருப்பதாக, பா.ஜ.க மூத்ததலைவர் திரு.எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், தீர்ப்பு வெளியான நிலையில், திரு.அத்வானியை வரவேற்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள், அவரது இல்லம் முன்பு திரண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய திரு.அத்வானி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், தாமதமானாலும் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டார். தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் திரு.அத்வானி கூறினார்.