உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் தொலைபேசியில் பிரதமர் மோதி அறிவுறுத்தல்

Sep 30 2020 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ரா பகுதியில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க அம்மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யாநாத்தை பிரதமர் திரு. மோதி வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டம் சண்ட்பா கிராமத்தை சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண், கடந்த 14-ம் தேதி, அதே கிராமத்தை சேர்ந்த 4 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அப்பெண் வெளியில் சொல்லிவிடுவார் எனக்கருதிய அந்த கொடூர கும்பல் இளம்பெண்ணை கடுமையாக தாக்கியது. இதில் நாக்கு துண்டிக்கப்பட்ட அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில், அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லி Safdarjung மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யாநாத்தை தொலைபேசி மூலம் இன்று காலை தொடர்பு கொண்ட பிரதமர் திரு. மோதி, சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதனையொட்டி, இவ்வழக்‍கை விசாரிக்‍க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை திரு. யோகி ஆதித்யாநாத் அமைத்துள்ளார். மேலும், 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அக்‍குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00