உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலை போலீசாரே தகனம் செய்த விவகாரம் - ராகுல் கடும் கண்டனம்
Sep 30 2020 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலை போலீசாரே தகனம் செய்தற்கு திரு. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஹத்ரஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணின் உடலை, மருத்துவமனையிலிருந்து எடுத்து சென்ற போலீசாரே, நள்ளிரவில் தகனம் செய்தனர். அப்போது, அப்பெண்ணின் உறவினர்கள், போலீஸ் வாகனங்களை மறித்து, தங்கள் பெண்ணிற்கு நீதி வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
உத்தரப்பிரதேச போலீசாரின் செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள திரு. ராகுல் காந்தி, இந்தியாவின் ஒரு மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார் - உண்மைகள் அடக்கப்படுகின்றன - பெண்ணின் இறுதி சடங்குக்கான உரிமையும் அவளது குடும்பத்தில் இருந்து பறிக்கப்படுவது அநியாயமானது என்று குறிப்பிட்டுள்ளார்.