இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 ஆயிரத்து 472 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த பாதிப்பு 62 லட்சத்தை கடந்தது
Sep 30 2020 11:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 ஆயிரத்து 472 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ள போதிலும், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 80 ஆயிரத்து 472 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62 லட்சத்து 25 ஆயிரத்து 764-ஆக உயர்ந்துள்ளது. இதில், 9 லட்சத்து 40 ஆயிரத்து 441 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 51 லட்சத்து 87 ஆயிரத்து 826 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 179 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 97 ஆயிரத்து 497-ஆக அதிகரித்துள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது