அயோத்தியைப்போல் தீவிரமடையும் கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம் - மதுராவில் வரும் 15ம் தேதி கூடுகிறது சாதுக்கள் சபை
Sep 30 2020 8:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராம் ஜென்ம பூமியைப்போல் கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரமும் தற்போது தலை தூக்கியுள்ளது.
மதுராவில் உள்ள மசூதிகளை இந்துக்களுக்கு விட்டுத்தர வேண்டும் என அகில இந்திய சாதுக்கள் சபை வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து விவாதிக்க அகில இந்திய சாதுக்கள் சபை மதுராவில் அக்டோபர் மாதம் 15ம் தேதி கூடுகிறது. அந்த சபையின் தலைவர் மஹிந்த் நரேந்திரகிரி தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரத்தை எப்படி எடுத்து செல்வது என்பது குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, மதுரா நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.