கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர் சட்டப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை எழுத உச்சநீதிமன்றம் அனுமதி
Sep 28 2020 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர், சட்டப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை எழுத உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் சட்டப் பல்கழகங்களில் சேர்வதற்கான CLAT தேர்வு, இன்று நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர், தன்னை தேர்வெழுத அனுமதிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு.அசோக் பூஷன், திரு.சுபாஷ் ரெட்டி, திரு.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, மாணவரை தனியறையில் தேர்வெழுத அனுமதி அளித்து உத்தரவிட்டது.