வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் - பஞ்சாபில் நடைபெறும் போராட்டத்தில் ராகுல் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்
Sep 28 2020 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் நடைபெற்று வரும் போராட்டத்தில், காங்கிரஸ் எம்.பி. திரு.ராகுல்காந்தி பங்கேற்கவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இன்று பஞ்சாப் முதலமைச்சர் திரு.அமரீந்தர் சிங் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், இந்த வாரத்தில் திரு.ராகுல்காந்தியும் போராட்டத்தில் பங்குபெறுவார் எனவும், தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபை தொடர்ந்து, ஹரியானாவில் நடைபெறும் போராட்டத்திலும் திரு.ராகுல்காந்தி பங்குபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.