மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து - பா.ஜ.க. தேசிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
Sep 28 2020 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பா.ஜ.க.வின் புதிய தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.அனுபம் ஹஸ்ரா, மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி குறித்து அவதூறான கருத்துகளை கூறியதாக,புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க பா.ஜ.க நிர்வாகி திரு.அனுபம் ஹஸ்ரா, செல்வி.மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குறிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். பொதுவாழ்வில் உள்ள பெண்ணை இழிவுபடுத்தும் வகையிலான கருத்தை தெரிவித்துள்ளதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் சிலிகுரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.