மத்தியப் பிரதேசத்தில் மனைவியை தாக்கிய காவல்துறை அதிகாரி பதவியில் இருந்து விடுவிப்பு
Sep 28 2020 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியப் பிரதேசத்தில் காவல்துறை கூடுதல் இயக்குநராக இருந்த திரு.புருஷோத்தம் ஷர்மா, அவரது மனைவியை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். திரு.புருஷோத்தம் ஷர்மா தனது மனைவியை சரமாரியாக தாக்கும் வீடியோ, அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள திரு.புருசோத்தம் ஷர்மா, இது குடும்பத் தகராறு எனவும், தன் மீது எந்த தவறும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.