கொரோனா 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகுமா? - திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க வாய்ப்பு
Sep 28 2020 10:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்றும், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றை திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகிவுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ள 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், இசை - நடன அரங்குகள் போன்றவற்றை திறக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ளதால் கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.