அசாமில் அதிகரிக்கும் கனமழை - 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
Sep 28 2020 11:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அசாமில் அதிகரிக்கும் கனமழையால் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அளித்துள்ள தகவலின்படி, இந்த ஆண்டில் மூன்றாவதாக வெள்ளத்தால் தேமாஜி, லக்கிம்பூர், மோரிகான், உள்ளிட்ட மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் பயிர் பரப்பளவு வெள்ள நீரில் மூழ்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.