இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு அறிவிப்பு
Sep 25 2020 6:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை,மருத்துவ படிப்பு பாடத்திட்டம், மருத்துவ படிப்பு முடித்தவர்கள் பதிவு உள்ளிட்ட மருத்துவம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் வரையறுத்து, கண்கானித்து னடவடிக்கை எடுத்துவந்தது இந்திய மருத்துவ கவுன்சில். மத்திய பா.ஜ.க. அரசு இந்த மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ கமிஷனை உருவாக்கியது. இதனுடன் சேர்த்து மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான 2 வாரியங்கள்,மருத்துவ தர ஆய்வு வாரியம், மருத்துவ ஒழுங்குமுறை மற்றும் பதிவு வாரியம்,என நான்கு தன்னாட்சி அமைப்புகளையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்முறைக்கு வந்ததை தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கட்டுவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.