ராஜஸ்தான் மாநில அரசியலில் திடீர் பரபரப்பு - ராகுல் காந்தியுடன் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் சந்திப்பு
Aug 10 2020 6:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான் சட்டப்பேரவை வரும் 14-ம் தேதி கூடவுள்ள நிலையில், அதிருப்தியில் உள்ள முன்னாள் துணை முதலமைச்சர் திரு.சச்சின் பைலட், ராகுல்காந்தியை சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பான சூழலுக்கு இடையே ராஜஸ்தான் சட்டப்பேரவை வரும் 14-ம் தேதி கூடவுள்ளது. அன்றைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தனது பெரும்பான்மையை நிரூபிக்க, முதலமைச்சர் திரு.அசோக் கெலாட் அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அதிருப்தியில் உள்ள திரு.சச்சின் பைலட், திரு.ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில், திருமதி.சோனியா காந்தி மற்றும் திருமதி.பிரியங்கா காந்தியும், உடன் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர், மீண்டும் கட்சித் தலைவர்களை அணுகியுள்ளதாகவும், அவர்களை நிபந்தனையற்ற மன்னிப்பு கோரும்படி, மூத்த தலைவர்கள் சிலர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் கட்சித்தலைமையை சந்தித்து அவர்களது கருத்துகளை பகிரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.