மூணாறு நிலச்சரிவில் சிக்‍கி பலியானோரில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு - உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 48-ஆக அதிகரிப்பு

Aug 10 2020 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள மாநிலம் இடுக்‍கி நிலச்சரிவில் சிக்‍கி உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 49-ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடுக்‍கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை தேயிலை தோட்டப் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு, அதில், மலைத்தோட்ட தொழிலாளர்கள் உட்பட 78 பேர் சிக்‍கிக்‍ கொண்டனர். இவர்களில் 12 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர். நிலச்சரிவில் சிக்‍கிய 26 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 17 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இன்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 49-ஆக அதிகரித்துள்ளது. எஞ்சியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் மழை நீடிக்‍கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆலப்புழா, இடுக்‍கி, கோழிக்‍கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்‍கு Red Alert எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது. கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பத்தனம்திட்டா, பாலக்‍காடு ஆகிய மாவட்டங்களுக்‍கு Orange எச்சரிக்‍கையும், தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மஞ்சள் எச்சரிக்‍கையும் விடுக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00