சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை திரும்பப்பெற ராகுல்காந்தி வலியுறுத்தல் - நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென வேண்டுகோள்
Aug 10 2020 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை திரும்பப்பெற வேண்டுமென, திரு.ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைய உள்ளது. இந்த வரைவு அறிக்கையை திரும்பப்பெற வேண்டுமென, திரு. ராகுல்காந்தி, சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளார். இந்த வரைவு அறிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாகி, நம் சந்ததியினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள திரு.ராகுல்காந்தி, இதன் நோக்கம் தேசத்தை கொள்ளையடிப்பதுதான் என்பது தெளிவாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது பணக்கார நண்பர்கள், நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக, மத்திய அரசு செய்யும் செயல்களை ஊக்குவிக்கவே இந்த வரைவு அறிக்கை என்றும் திரு.ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.