கர்நாடகா ஜோக் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர் : பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
Aug 10 2020 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலத்தில் தொடர் மழையால், புகழ்பெற்ற ஜோக் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தட்சிண கன்னடா, குடகு, பெலகாவி, ஷிமோகா, மைசூர் மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஷிமோகா மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஜோக் நீர் வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வானுயர்ந்து காணப்படும் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது கண்கொள்ளா காட்சியாகும். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.