சுஷாந்த் தற்கொலை வழக்கு : நடிகை ரியாவிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை - ரியாவின் தந்தை, சகோதரரும் விசாரணைக்காக ஆஜர்

Aug 10 2020 2:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கின் விசாரணைக்காக, நடிகை ரியா சக்ரபோர்டி, அவரது தந்தை மற்றும் சகோதரர், மும்பையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கை மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுஷாந்தின் வங்கிக்கணக்கில் இருந்த 15 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக, அவரது தந்தை குற்றம் சாட்டியிருந்தார். இந்த பண மோசடி புகாரை அடிப்படையாக வைத்து, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. பாட்னாவில் பதியப்பட்ட வழக்கை, மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை காரணம் காட்டி, அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென, நடிகை ரியா சக்ரபோர்டி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவரது கோரிக்கையை அமலாக்கத்துறை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, மும்பையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ரியா சக்ரபோர்டி நேற்று நேரில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து, இன்றும் நடிகை ரியா சக்ரபோர்டி, அவரது தந்தை மற்றும் சகோதரர், மும்பையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00